Thursday, January 5, 2012

மௌன மொழிகள்.




நான் யார் என்று....

தேடிகொண்டிருந்தேன்

விடை தேடும் பள்ளிமாணவாக,

எதுவும் பிடிபடவில்லை

நீரில் விழுந்த மழைதுளி போல்.

வரலாறும் தெரியாது

வாழ்க்கை பற்றியும் தெரியாது.

காலம் பல கடந்துவிட்டது

இன்றளவும் அதே கலங்கிய மனநிலையோடு.

எதாவது செய் என சொல்லும் மனது

என்ன செய்வது என்று தெரியாமல் புலம்புகிறது.

ஊக்குவிக்க ஆள் இருந்தால்

"ஊக்கு" விற்பவன் கூட உலகை ஆள்வான்.

யாருக்கு தெரியும் ...

என்னை போல எத்தனை மனங்கள்

மௌன மொழிகளில் பேசிக்கொன்டிருக்கிறதோ!

                                       ---பாலா----

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.