Sunday, January 1, 2012

பேனாவின் சிறப்பு


கத்தியின் கூர்மையும் 
புத்தியின் கூர்மையும் 
எனக்கு அடிமை.
வெற்றிடங்களுக்கு 
விளக்கம் கொடுப்பதும் 
முகவரி தெரியாதவனுக்கு 
முகவரி கொடுப்பதும் என் கடமை.
இதிகாசங்களை துறந்து 
இலக்கியங்களை கடந்து 
எதிர்காலத்தை தான்டியும்
என் பயணம் தொடரும்.
வல்லுனர்கள் கூட- என்
வயதை கணிக்க விழி பிதுங்குவர்.
சிறிய சாதனைக்காக 
பெரிய பேனர்களில் என் கண்ணீரை 
காசாக்கும் போது - வலிதாங்கமல் 
வழக்கத்தை விட அதிகமாக அழுதுவிடுகிறேன்.
அதுகூட அவர்களுக்கு மிகபெரிய  விளம்பரம்தான்.
எத்தனை வரலாற்றை 
எழுதி இருந்தும் - தான்
என்ற அகங்காரம் இல்லாமல் 
தலை குனிந்தே வாழ்கிறேன்.
என்னை அடிமை படுத்துபவன் 
என்போல் தன்னடக்கத்தோடு வாழாமல் 
தலை நிமிர்ந்து பீழ்த்திக்கொல்லும்போது மட்டும் 
மௌனமாய் சிரிக்குறேன்.
                                        ---------பாலா-------




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.