Sunday, January 8, 2012

கடிகாரத்தின் புலம்பல்.

என்ன...
தவறு செய்தேன் 
பிறக்கும்போது 
ஓடதொடங்கும் என்பயணம் 
இறக்கும்வரை நிற்பதேஇல்லை
பாவம் மனிதர்கள்,
என் ஓட்டத்தை பிடிக்கமுடியாமல் 
ஓழ்ந்து போகின்றனர்.
திட்டம் போட்டு ஒரு வட்டத்தில் 
அடைத்தாலும் - சட்டம் போட்டு 
என் பயணத்தை தடுக்கமுடியாது.
உலக மக்கள் அனைவரும்  
ஒருமுறையாவது என்னை பார்க்காமல் 
இருக்கமாட்டார்கள்.
தடைகளைத்தாண்டி 
ஓடிக்கொண்டிருக்கும் என்னால் 
ஒலிம்பிக்கில் ஒரு தங்கம் கூட
வாங்கமுடியவில்லை என்பதே
மிகபெரிய வருத்தம்.
இப்படிக்கு கடிகாரம்.    
   

 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.