கன்னியாகத்தான்
இருந்தேன் - யாரும்
கண்டுகொள்ளவில்லை.
உன் கரம் பட்டவுடன் தான்
பூப்படைந்தேன்.
இப்போது என்னை காண
எத்தனை கண்கள்.
வரிகள் எனும் வாரிசை
என் வயிற்றில் சுமக்கிறேன்
படிக்கும் கண்களுக்கு
தெரியாமளாபோகும் - நான்
கருவுற்றிருப்பது.
பேனாவிடம் காகிதம் கிசு கிசுத்தது.
----பாலா---
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.