Sunday, January 8, 2012

கவிதை பேசுகிறது.

 
இரு உடல்கள் 
பரிமாரிகொல்லும்போது
உயிர்கள் பிறக்கிறது 
அதற்கு பிறப்பும் இறப்பும் 
ஒரு முறைதான்.
-----------------------------------------
இரு உள்ளங்கள் 
பரிமாரிகொல்லும்போது 
நான் பிறக்கிறேன் 
என்றும் இறப்பு இல்லாதவனாக.
-------------------------------------------
உயிர்கள் 
வளர்ந்து உறவாடிகொள்ள 
மொழி தேவை,
உள்ளங்கள் 
இரண்டும் இடம்மாரிகொள்ள 
நான் தேவை,
-------------------------------------------
ஒரு முறை பிறந்து...
ஒரு முறை இறக்கும் 
மனித உள்ளங்களில் 
கோடி முறை பிறந்து 
ஒரு முறை இறக்கிறேன் 
தோல்வியடையும்போது மட்டும்.
--------------------------------------------
உறவுகள் பிரிந்தாலும் 
உள்ளங்களை மறந்தாலும் 
நினைவுகளை மட்டும் சுமந்து வாழும் 
உயிரற்ற ஜீவனாக நான்,
இப்படிக்கு கவிதை. 
                                  --------பாலா----      



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.