காலத்தை கடந்த காதல்


*கரடு முரடான என் 
வாழ்கைக்கு காரணன் தேடி
நடந்துபோனேன்.
உன்னை...
கண்டவுடன் அனைத்தும் 
மறந்துபோனேன்.
--------------------------------------------------------------
யார் நீ!
உறங்க மறுத்த 
என் விழிகளுக்கு
விருந்து படைத்தவளே.
எதிர்காலம் தேடும் இந்த பித்தனை
சித்தன் ஆக்கியது உன் தரிசனம்.
இயற்கை வரைந்த ஓவியமே
இதோ உனக்காக நன் எழுதும் காவியம்!
----------------------------------------------------------------------
* சிக்கி முக்கி கற்களில்
 நெருப்பை கண்டவன் கூட
 திக்குமுக்காடி போவான் - உன்
 விழிகளின் வெப்பத்தை பார்க்கும் போது.
----------------------------------------------------------------------
* சக்கரத்தின் கண்டுபிடிப்பு
 நாகரிகத்தின் தொடக்கம் 
 உன் தரிசனம் இல்லா நாட்கள்
 எனக்கு வேதனையின்முடக்கம்.
----------------------------------------------------------------------
* உலோகங்களை கண்டுபிடித்தவனும்
 தோற்றுத்தான் போவன்- உன்
 உள்மன ஆயத்தை காணமுடியாமல்.
 செம்பு கண்டுபிடித்தவனுக்கு
 உன் மீது கோபம் - உன்
 அன்பு  கிடைக்கவில்லைஎன்று,
---------------------------------------------------------------------
* எத்தனையோ
 காதல்கள் பள்ளத்தில்
 இருந்தும்.
  என்றும் - உன் காதல்
 நிலைத்திருக்கும் என் உள்ளத்தில் .
----------------------------------------------------------------------
* விலங்குகளை 
 எதிர்த்து  வேட்டையாடினேன்  
  இயற்கையோடும் போராடினேன்
 இப்படி ஐம் பூதங்களுக்கும் அடங்காத
 என் மனம் 
 உன் ஐம் புலன்களைகண்டு
 அடங்கி போகிறது.
-----------------------------------------------------------------------
* நெருப்பில் வெந்து
 நீரில் நனைந்து
 வானில் பறந்து
 காற்றில் என் உயீர் கலந்து போகும்முன்
 உன் கண்களில் விழுந்து
 செவிழில் நுழைந்து
 மெழ்யில் கலந்து - வாழ் மொழியில் வாதடியாவது
 உன் இதயத்தில் இடம் பிடித்துவிடவேடவேண்டும் .
----------------------------------------------------------------------------------
* காட்டை கடந்து
 நாட்டிற்கு வந்தேன் - இது
 நாகரிகத்தின்வளர்ச்சி  - இவையாவும் 
 உன்னால் ஏற்பட்ட சூச்சி.
 மன்னர்களின் பேத்தியியே 
 ஓரபார்வையால்  என்னை சாய்த்தாயே!
 நெப்போலியனுக்கு  நெருங்கிய சொந்தமே
 நீ இல்லாமல்  எனக்கு கிடையாது வேறு பந்தமே!
 ------------------------------------------------------------------------------
  *அர்ஜுனனின் வில்வித்தையும்
   அனுமனின் சொல்வித்தையும்
   தாண்டவம் ஆடும் - உன்
   பேச்சிலும் வீச்சிலும்.
--------------------------------------------------------
* சங்ககால மன்னரான
  சேர, சோழ, பாண்டியனின்
  கண்ணில் நீ பட்டிருந்தால்
  ஆங்காங்கே   செதுக்கபட்டிருப்பாய் சிற்பமாக.
-----------------------------------------------------------
* என்னை ஆள பிறந்தவளே
   கலப்பிரர்களின் புலம்பலை கேட்டாய
   உன்னை காணாத நாட்கள் தான்
   வரலாற்றில் இருண்டகாலமாம் .
   பல்லவர்களின் படைப்பிற்கு - மகாபலிபுரம்
   உன் நினைவால் துடிக்கும் - என்
   இதயத்திற்கு என்றும் நீ தூங்காநகரம்.
------------------------------------------------------------
* நன் உன் மீது கொண்ட காதலுக்கு சாட்சி !
  சோழ மன்னர்களின் ஆட்சி,
   ஆயிரம் ஆண்டு கடந்தும் - அவன் புகழ்
   நீங்காமல் நிலைக்கிறது,
  இறவுகள் பல கடந்தும் என் 
  மனம்  தூங்காமல் தவிக்கிறது!
------------------------------------------------------------
* கரிகாலன் கட்டிய 
  கல்லணைக்கும் ஒரு காரணம் உண்டு ,
  அது உன் இதயத்தில் இருந்து
  எடுக்கப்பட்ட சிறு இரும்புத்துண்டு  
  மன்னர்களின் ஆட்சி கூட மாறியது
  என் மனதில் பதிந்த
  உன் காட்சி மட்டும் மாறவில்லை !
-------------------------------------------------------------
* இந்தியர்களையே
  ஏங்கவைத்திருக்கவேண்டும்
  உன் இடை!
  அதை கண்டுகொள்ளதான்
  அடிக்கடி  வந்துபோனதோ
  ஆங்கிலேயரின்படை !
--------------------------------------------------------------
*காதலனை தேர்ந்தெடுக்க
 நீ நடத்திய  நாடகம் தான்
 முதல் உலகப்போரா !
 ஆங்கிலேயரிடம்  அகிம்சை
 முறையில் பெறப்பட்டதே சுதந்திரம்
 உன்னை கண்ட நாள் முதல்
 அது பறிபோனதே நிரந்தரம் !
--------------------------------------------------------------
* அறிவியலின் அதிசயமா நீ
   புவிஈர்ப்பு   விசையை கண்ட
  நீயூட்டனுக்குள்ளும்  மாற்றத்தை
  ஏற்படுத்தி இருக்கும்  உன் விழிஈர்புவிசை !
  உன் இதயத்தை
  நன்கு ஆராய்ந்துவிட்டுத்தான்
  அணுவை பிளக்க முடியாது 
  என்றான  ரூதர்ட்போர்டு.
-------------------------------------------------------------
 உன்  கோபத்திற்கு
   காரணம் தேடித்தான் எலக்ட்ரானை
   கண்டுபுடித்தானா தாம்சங்
   நீல நிற கடலுக்கு
  காரணம் சொன்னது ராமன் விளைவு  
  உன் நிழலை கூட
  சுமந்து  வருகிறது எந்தன் நினைவு 
------------------------------------------------------------ 
* E=MC2  இது
  ஐயன்ஸ்டீன் பார்முலா
  எதிரியும் மயங்கிபோவது
  உன் கருவிழி பார்வையினாலா
  அன்பு கட்டும் பொது 
  அணுவைபோல் ஒடுங்கி  போகும் நீ 
  கோபம் கொள்ளும்போது ஏன்
   நீயூட்டனின் மூன்றாம் விதியாகிராய்
------------------------------------------------------------
* அறிவியலின் அடுத்த கட்டமே !
   என் இறுதி மூட்சும் உன்னை சுற்றுமே
   உன்மீது கொண்ட மோகம் தான்
  கருங்கூந்தலை கடன் வாங்கி கொண்டதா  மேகம் 
  உதட்டு சாயத்தோடு நி துப்பிய
  எச்சிலின் எதிரொலிதான்
   மேகத்தின் மீது வரையப்பட்ட வானவில்லா
-------------------------------------------------------------
* ராணுவ ரகசியமாய் இருக்கும்
  உன் மௌனத்தை ஆராயத்தான்
  அனுப்பப்பட்டதா ஆரியப்பட்டா !
  இன்று உலகையே
  அட்ச்சுறுத்தும் புரமோஷ்  ஏவுகனை
  உன் ஒட்டுமொத்த கோபத்தின் வினை !
 அதனால்தான்  உன்னுடன் நேரில்
  பேச அச்சப்பட்டு கைபேசியை
  கண்டுபிடித்தானோ என்னவோ !
-------------------------------------------------------
* உலகையே ஒன்றிணைக்கும்
   இணையதளமா - உன் இதயகளம்
  பார்த்தவுடன் அனைவரும்
 பதியவைக்கின்றனர் தன் காதலை !
 சூரியனும் நிலவும்
 சந்திக்கும் அன்று சூரியகிரகணம்
 என்றாவது உன் இதயம் என்னை பற்றி
 சிந்திக்குமே அன்றே நம் திருமணம்.
--------------------------------------------------------
*கற்காலத்தில்   இருந்து
 நான் கடந்து வந்த பாதையை
 பார்த்தல் -  நீ தான் என்
 எதிர்காலம் என்று தெளிவாக தெரியும்
 இது உனக்கும் ஓர் நாள் புரியும்.
----------------------------------------------------
* காலங்கள் பல கடந்தும்
  இன்னும் கானல் நீராகதான்
  உன்னிடத்தில் என் காதல்
  நானும் ஒரு கஜினிமுகமதுதான்
  உன் இதயம் எனும்
  கோட்டையை அடைய பலமுறை
 படையெடுத்தும் தோற்றுபோனேன்.
------------------------------------------------------
* என்னவோ .....
  வரலாறு உன்னை
  உற்றுபார்க்கிறது
 அனேகமாக அடுத்த அமைதிக்கான
 நோபல்பரிசு உனக்குத்தான்.

                                         காதலுடன் பாலா (எ) சுதந்திரன்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.