*கரடு முரடான என்
வாழ்கைக்கு காரணன் தேடி
நடந்துபோனேன்.
உன்னை...
கண்டவுடன் அனைத்தும்
மறந்துபோனேன்.
--------------------------------------------------------------
யார் நீ!
உறங்க மறுத்த
என் விழிகளுக்கு
விருந்து படைத்தவளே.
எதிர்காலம் தேடும் இந்த பித்தனை
சித்தன் ஆக்கியது உன் தரிசனம்.
இயற்கை வரைந்த ஓவியமே
இதோ உனக்காக நன் எழுதும் காவியம்!
----------------------------------------------------------------------
* சிக்கி முக்கி கற்களில்
நெருப்பை கண்டவன் கூட
திக்குமுக்காடி போவான் - உன்
விழிகளின் வெப்பத்தை பார்க்கும் போது.
----------------------------------------------------------------------
* சக்கரத்தின் கண்டுபிடிப்பு
நாகரிகத்தின் தொடக்கம்
உன் தரிசனம் இல்லா நாட்கள்
எனக்கு வேதனையின்முடக்கம்.
----------------------------------------------------------------------
* உலோகங்களை கண்டுபிடித்தவனும்
தோற்றுத்தான் போவன்- உன்
உள்மன ஆயத்தை காணமுடியாமல்.
செம்பு கண்டுபிடித்தவனுக்கு
உன் மீது கோபம் - உன்
அன்பு கிடைக்கவில்லைஎன்று,
---------------------------------------------------------------------
* எத்தனையோ
காதல்கள் பள்ளத்தில்
இருந்தும்.
என்றும் - உன் காதல்
நிலைத்திருக்கும் என் உள்ளத்தில் .
----------------------------------------------------------------------
* விலங்குகளை
எதிர்த்து வேட்டையாடினேன்
இயற்கையோடும் போராடினேன்
இப்படி ஐம் பூதங்களுக்கும் அடங்காத
என் மனம்
உன் ஐம் புலன்களைகண்டு
அடங்கி போகிறது.
-----------------------------------------------------------------------
* நெருப்பில் வெந்து
நீரில் நனைந்து
வானில் பறந்து
காற்றில் என் உயீர் கலந்து போகும்முன்
உன் கண்களில் விழுந்து
செவிழில் நுழைந்து
மெழ்யில் கலந்து - வாழ் மொழியில் வாதடியாவது
உன் இதயத்தில் இடம் பிடித்துவிடவேடவேண்டும் .
----------------------------------------------------------------------------------
* காட்டை கடந்து
நாட்டிற்கு வந்தேன் - இது
நாகரிகத்தின்வளர்ச்சி - இவையாவும்
உன்னால் ஏற்பட்ட சூச்சி.
மன்னர்களின் பேத்தியியே
ஓரபார்வையால் என்னை சாய்த்தாயே!
நெப்போலியனுக்கு நெருங்கிய சொந்தமே
நீ இல்லாமல் எனக்கு கிடையாது வேறு பந்தமே!
------------------------------------------------------------------------------
*அர்ஜுனனின் வில்வித்தையும்
அனுமனின் சொல்வித்தையும்
தாண்டவம் ஆடும் - உன்
பேச்சிலும் வீச்சிலும்.
--------------------------------------------------------
* சங்ககால மன்னரான
சேர, சோழ, பாண்டியனின்
கண்ணில் நீ பட்டிருந்தால்
ஆங்காங்கே செதுக்கபட்டிருப்பாய் சிற்பமாக.
-----------------------------------------------------------
* என்னை ஆள பிறந்தவளே
கலப்பிரர்களின் புலம்பலை கேட்டாய,
உன்னை காணாத நாட்கள் தான்
வரலாற்றில் இருண்டகாலமாம் .
பல்லவர்களின் படைப்பிற்கு - மகாபலிபுரம்
உன் நினைவால் துடிக்கும் - என்
இதயத்திற்கு என்றும் நீ தூங்காநகரம்.
------------------------------------------------------------
* நன் உன் மீது கொண்ட காதலுக்கு சாட்சி !
சோழ மன்னர்களின் ஆட்சி,
ஆயிரம் ஆண்டு கடந்தும் - அவன் புகழ்
நீங்காமல் நிலைக்கிறது,
இறவுகள் பல கடந்தும் என்
மனம் தூங்காமல் தவிக்கிறது!
------------------------------------------------------------
* கரிகாலன் கட்டிய
கல்லணைக்கும் ஒரு காரணம் உண்டு ,
அது உன் இதயத்தில் இருந்து
எடுக்கப்பட்ட சிறு இரும்புத்துண்டு
மன்னர்களின் ஆட்சி கூட மாறியது
என் மனதில் பதிந்த
உன் காட்சி மட்டும் மாறவில்லை !
-------------------------------------------------------------
* இந்தியர்களையே
ஏங்கவைத்திருக்கவேண்டும்
உன் இடை!
அதை கண்டுகொள்ளதான்
அடிக்கடி வந்துபோனதோ
ஆங்கிலேயரின்படை !
--------------------------------------------------------------
*காதலனை தேர்ந்தெடுக்க
நீ நடத்திய நாடகம் தான்
முதல் உலகப்போரா !
ஆங்கிலேயரிடம் அகிம்சை
முறையில் பெறப்பட்டதே சுதந்திரம்
உன்னை கண்ட நாள் முதல்
அது பறிபோனதே நிரந்தரம் !
--------------------------------------------------------------
* அறிவியலின் அதிசயமா நீ
புவிஈர்ப்பு விசையை கண்ட
நீயூட்டனுக்குள்ளும் மாற்றத்தை
ஏற்படுத்தி இருக்கும் உன் விழிஈர்புவிசை !
உன் இதயத்தை
நன்கு ஆராய்ந்துவிட்டுத்தான்
அணுவை பிளக்க முடியாது
என்றான ரூதர்ட்போர்டு.
-------------------------------------------------------------
* உன் கோபத்திற்கு
காரணம் தேடித்தான் எலக்ட்ரானை
கண்டுபுடித்தானா தாம்சங்
நீல நிற
கடலுக்கு
காரணம் சொன்னது ராமன் விளைவு
உன் நிழலை கூட
சுமந்து வருகிறது எந்தன் நினைவு
------------------------------------------------------------
* E=MC2 இது
ஐயன்ஸ்டீன் பார்முலா
எதிரியும் மயங்கிபோவது
உன் கருவிழி பார்வையினாலா
அன்பு கட்டும் பொது
அணுவைபோல் ஒடுங்கி போகும் நீ
கோபம் கொள்ளும்போது ஏன்
நீயூட்டனின் மூன்றாம் விதியாகிராய்
------------------------------------------------------------
* அறிவியலின் அடுத்த கட்டமே !
என் இறுதி மூட்சும் உன்னை சுற்றுமே
உன்மீது கொண்ட மோகம் தான்
கருங்கூந்தலை கடன் வாங்கி கொண்டதா மேகம்
உதட்டு சாயத்தோடு நி துப்பிய
எச்சிலின் எதிரொலிதான்
மேகத்தின் மீது வரையப்பட்ட வானவில்லா
-------------------------------------------------------------
* ராணுவ ரகசியமாய் இருக்கும்
உன் மௌனத்தை ஆராயத்தான்
அனுப்பப்பட்டதா ஆரியப்பட்டா !
இன்று உலகையே
அட்ச்சுறுத்தும் புரமோஷ் ஏவுகனை
உன் ஒட்டுமொத்த கோபத்தின் வினை !
அதனால்தான் உன்னுடன் நேரில்
பேச அச்சப்பட்டு கைபேசியை
கண்டுபிடித்தானோ என்னவோ !
-------------------------------------------------------
* உலகையே ஒன்றிணைக்கும்
இணையதளமா - உன் இதயகளம்
பார்த்தவுடன் அனைவரும்
பதியவைக்கின்றனர் தன் காதலை !
சூரியனும் நிலவும்
சந்திக்கும் அன்று சூரியகிரகணம்
என்றாவது உன் இதயம் என்னை பற்றி
சிந்திக்குமே அன்றே நம் திருமணம்.
--------------------------------------------------------
*கற்காலத்தில் இருந்து
நான் கடந்து வந்த பாதையை
பார்த்தல் - நீ தான் என்
எதிர்காலம் என்று தெளிவாக
தெரியும்
இது உனக்கும் ஓர் நாள் புரியும்.
----------------------------------------------------
* காலங்கள் பல கடந்தும்
இன்னும் கானல் நீராகதான்
உன்னிடத்தில் என் காதல்
நானும் ஒரு கஜினிமுகமதுதான்
உன் இதயம் எனும்
கோட்டையை அடைய பலமுறை
படையெடுத்தும் தோற்றுபோனேன்.
------------------------------------------------------
* என்னவோ .....
வரலாறு உன்னை
உற்றுபார்க்கிறது
அனேகமாக அடுத்த அமைதிக்கான
நோபல்பரிசு உனக்குத்தான்.
காதலுடன் பாலா (எ) சுதந்திரன்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.